ஒருவர் தனது விலையுயர்ந்தக் காரை தனது வீட்டின் முன்பாக வீதியில் நிறுத்தியிருந்தார்.
அந்த வழியாகச் சென்ற தெரு நாய் ஒன்று அதன் மீது சிறுநீர் கழித்தது.
இதைப் பார்த்த கார் உரிமையாளர்
சிரித்தார்.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ஐயா நீங்கள் ஏன் நாயைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று ஆச்சரியத்துடன் கேட்டதற்கு…
அந்தக் காரின் உரிமையாளர் மிகவும் சாந்தமாக, நாய் அதன் அறிவிற்கு எட்டியதைச் செய்கின்றது. அதற்கு இக்காரின் மதிப்பைப் பற்றித் தெரியாது. சொன்னாலும் அதற்குப் புரியாது என்று
சிரித்துக் கொண்டே கூறினார். கேள்வி கேட்டவர் இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இது போலத் தான் உங்கள் வாழ்விலும் உங்கள் மதிப்பை அறியாதவர்கள் உங்களை அவமானப்படுத்தும் போதும், கேலி செய்யும் போதும் அவர்களைப் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள்.
“உங்கள் கடமை எதுவோ அதைச் செய்யுங்கள் நீங்கள் சொல் செயல் வீரராக இருங்கள் “அவர்களைக் கண்டு கொள்ளாதீர்கள்.
.
வாழ்க நலமுடன் உயர்க வளமுடன் 🙏🍇🍎🍇
வேதமித்ரா ஜோதிட மையம்
ராக்போர்டு ராஜ் P.S
7558156423