பூர்வ புண்ணிய ஸ்தானமும் பூமியில் நாம் செய்ய வேண்டிய செயல்கள❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  நம் முன்னோர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் நமக்கும் நமது சந்ததியினருக்கும் பல அசுப பலன்களை தருவதைப் போல

  முன்னோர்கள்  இறந்த திதி அன்று 

ஆண்டு தோறும் உங்களின் முன்னோர்களை பிடித்து இருந்தாலும் பிடிக்காவிட்டாலும் அவர்களுக்கு உரிய முன்னோர் சிரார்த்தத்தை செய்ய வேண்டும்.

  ஆண்டு தோறும்  அவர்களுக்கு உரிய உணவை நாம் அளிக்காமல்  இறந்த முன்னோர்கள்  ஏமாற்றம் அடைந்தால் 

🌹திருமணத்தடை,

🌹தொழில் தடை அல்லது வேலையின்மை,

🌹குழந்தை பாக்கிய தடை,

🌹நீங்கா வறுமை,

🌹அகால மரணம்,

🌹தீரா நோய்,

🌹எண்ணிய காரியம் நிறைவேறாமை,

போன்ற அசுப பலன்கள் தருகிறது.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

இறந்த திதி அன்று  சிரார்த்தம் கொடுக்க இயலாதவர்கள்

ஆடி,
புரட்டாசி
,தை மாதங்களில் வரும் அம்மாவாசையில்
ஏதேனும் ஓரு அம்மாவாசையில் சிரார்த்தம் செய்யலாம்.

   தாய்,தந்தையை குறிக்கும் கிரகங்கள்

சூரியன்,சந்திரன் ஆகும்.அந்த இரண்டு கிரகங்கள் இணைந்த நாளே அம்மாவாசை ஆகும்.

 ராகு  பாட்டனாரையும், 

கேது பாட்டியையும் குறிக்கும் கிரகம்.

பிறந்த ஜாதகத்தில்

🌹பூர்வபுண்ணிய ஸ்தானம் என்றும் நமது முன்னோர்களை குறிக்கும்
5 அல்லது 9ம் இடங்களில் பாவ கிரங்கள் இருப்பது,

🌹 5 (அ) 9 ம் இடத்து அதிபதிகளுடன் பாவ கிரகங்கள் இணைந்து இருப்பது,

🌹5 (அ) 9ம் அதிபதி நீசம் அடைவது,

🌹5 (அ)9ம் அதிபதி அஸ்தமணம் அடைவது,

🌹5 (அ) 9 ம் அதிபதி லக்கனத்துக்கு 6,8,12ல் மறைவது,

🌹சூரியன்,சந்திரன் உடன் ராகு அல்லது கேது இணைவது,

  போன்ற காரணங்களினால் சில விதிவிலக்குகளுக்கு உட்பட்டு அசுப பலன்களை தருகிறது.

  🌹அகல மரணம் அடைந்தவருக்கு தில ஹோமம் ராமேஸ்வரத்தில் செய்து அவர்களை சாந்தி செய்து நற்பலனை பெறலாம்.🌹

    நதிக் கரைகளிலும், கடற்கரையிலும் மூத்தோர் காரியங்களை செய்து முழுக்கு செய்வது  சிறப்பு.

           இயலாதவர்கள் அவர்களின் இல்லத்திலும் செய்யலாம்.

  திருவள்ளுவர் மூத்தோர் கடன் பற்றி  அன்றே திருக்குறளில் தெளிவாக  தெரிவித்துள்ளார்.

  காஞ்சி பெரியவர்  வாழ்வில் முன்னேற மூத்தோர் கடனும்,குலதெய்வ வழிபாடும் இரண்டு கண்கள்  போன்றது என்று தெரிவித்து உள்ளார்.

   மாதம் தோறும் அம்மாவாசை தினத்தன்று முன்னோர்களை நினைத்து வீட்டில்  கோலமிடாமல் வழிபட வேண்டும்.

சாமிப் படத்துடன் இறந்த முன்னோர் படங்களை வைத்து வழிபட கூடாது.

திருக்கடையூரில் அபிராமி பட்டருக்காக அம்மாவாசையை பெளர்ணமி ஆக மாற்றி நிகழ்வும் தை அம்மாவாசை அன்று நிகழ்ந்தது.

   பிதுர் காரியத்தை செய்யாமல் விட்ட அனைவரும் எதிர் வரும் தை அம்மாவாசை தினத்தில் பிதுர் சிரார்த்தத்தை செய்து வாழ்வில் முன்னேற்றம் அடையுங்கள்.

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

💢அம்மாவாசையை பெளர்ணமியாக ஒளிரச் செய்த திருக்கடையூர் அபிராமி அம்மன்:

💢சக்திமிகு அபிராமி அந்தாதி கவசம் தோன்றிய நிகழ்வும்:

🌹மகானின் ஜாதகம் எப்படி இருக்கும்:

    சுபத்துவம் பெற்ற கேது,சனி,குரு கிரகங்களின் தொடர்பு பெற்று

     அவை  லக்னம் (அ) ராசிக்கு

தொடர்பு பெற்றும்

பூர்வ புண்ணியமும் வலுவாக இருக்கும்
நபர் முழுமையான இறைஅருள் பெற்ற மகானாக விளங்குவார்.

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

     திருவையாறு தியாகராஜர் வாழ்ந்த (முன்னூறு ஆண்டுகளுக்கு முன்) காலத்தில் 
              திருக்கடையூரில் சுப்பிரமணிய பட்டர் என்பவர் அபிராமி அம்மனை எப்போதும் நினைத்து தியானத்தில் இருந்து பல்வேறு பாடல்களை பாடி வெளிப்பார்வைக்கு ஒரு பித்தனைப் போல் வாழ்ந்து வந்தார்.

   அவரின் பக்தியும், அவர் பாடிய பாடல்களை உலகறிய திருவுள்ளம் கொண்ட அம்பிகை

      தை அம்மாவாசை தினத்தன்று அப்போது தஞ்சாவூரை ஆட்சி புரிந்த சரபோஜி மன்னன் திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக் கோவிலுக்கு வருகை புரிந்த போது 

      தன்னை கவனிக்காமல்  தியானத்தில் இருக்கும் இவர் யார் என்று கேட்க அவ்வூரைச் சேர்ந்த பட்டரை பிடிக்காத நபர்கள் அவரை ஒரு மனநோயாளி என்றும்  கோவில் பூஜைக்கு இடையூறு செய்கிறார் என்று மன்னனிடம் தெரிவிக்க

அதை சோதிக்க விரும்பிய மன்னன் இன்று என்ன திதி என்று பட்டரிடம் கேட்க தன்னை மறந்த நிலையில் அம்பிகை முகத்தை பெளர்ணமி நிலவாக எண்ணி தியானத்தில் இருந்த பட்டர் மன்னனிடம் பெளர்ணமி என்று சொல்ல

  கோபம் கொண்ட  மன்னன் 

இன்று முழு நிலவு வராவிட்டால் உனக்கு மரணதண்டனை என்று அறிவித்து சென்றார்.

    தியானம் கலைந்த பட்டர் மன்னன் வந்ததையும் தான் அமாவாசை திதியை பெளர்ணமி என்று தவறாக சென்னதை எண்ணி பதற்றம் அடைந்து 

    மன்னன் மரணதண்டனை அளிக்கும் முன் தானே தீக்குளியில் உயிரை மாய்க்க எண்ணி

   100 கயிற்றால் உறி அமைத்து அதன் கீழே நெருப்பிட்டு உறி மீது அமர்ந்து அபிராமி அம்மனை போற்றி பாடல்களை பாடுகிறார்.

  ஓரு பாடல் முடிந்ததும் ஒரு கயிறு வெட்டப்பட்டு  100பாடல் முடிந்தால்  அனைத்து கயிறும் வெட்டப்பட்டு கீழ் இருக்கும் தீக்குளியில் உயிரை மாய்க்க திட்டமிட்ட பட்டர்

79வது பாடலின் போது

   பட்டருக்கு அம்மனின் தரிசனம் கிடைத்து.

  100 பாடல்களையும் பாடி முடிக்க அம்மன் உத்திரவிட்டு

  தனது காது தோட்டை விண்ணில் வீச அது ஆயிரம் நிலவாக விண்ணில் பிரகாசித்தது.

  பூம்புகாரில் இருந்த மன்னன் இரவு விண்ணில் ஏற்பட்ட பிரகாசத்தை கண்டு வியந்து பட்டருக்கு பல்வேறு சன்மானம் வழங்கினார்.

அது முதல் சுப்பிரமணியன் என்று அழைக்கப்பட்ட பட்டர் அபிராமி பட்டர் என்று அழைக்கப்பட்டார்.

அப்போது பாடப்பட்ட 100 பாடல்களும் அபிராமி அந்தாதி என்று அழைக்கப்படுகிறது.

அந்தாதி என்றால்

🌹அந்தம்+ஆதி …..”முடிவு+தொடக்கம் “

       ஒவ்வொரு பாடலின் முடிவில் உள்ள வரி அடுத்த பாடலின் தொடக்கமாக வரும்.

 அபிராமி அந்தாதியில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு  இன்னல்களை தீர்க்க வல்லது.

 கல்வி,செல்வம்,நோய் தீர என்று மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் அருளக் கூடிய அபிராமி அந்தாதி பாடலை தினமும் பாராயணம் செய்யுங்கள் வாழ்வில் வளம் பெறுங்கள்.
                  நன்றி.

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

வாழ்க நலமுடன் உயர்க வளமுடன் 🙏🍇🍎🍇

வேதமித்ரா ஜோதிட மையம்

ராக்போர்டு ராஜ் P.S

7558156423

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *