நம்பிக்கை
திருமணமாகி 21 வருடங்களானாலும் இன்றளவும் என்னை அவர்கள் வீட்டில் எந்த ஒரு சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காத குணத்துக்காக.
எவ்வளவு கஷ்டம் வைத்தாலும் என்னை என் கணவன் காப்பாற்றுவார் என்று நம்பிக்கையுடன் படுத்ததும் தூங்கும் நம்பிக்கைக்காக.
காலையில் அவர்கள் அம்மா வீட்டிற்கு சென்றாலும் மாலையில் வாங்க வாங்க நம்ம வீட்டுக்கு போயிரலாம் என்று அழைக்கும் குணத்துக்காக.
மருத்துவகாரணங்களால் எவ்வளவோ சங்கடப்பட்டாலும் மனம் தளராமல் போராடி வெற்றி பெற்ற குணத்துக்காக.
இன்றளவும் என் பொருளாதாரமறிந்து அது வேண்டும் ,இது வேண்டும் என்று செலவு இழுத்துவிடாமல் ,என்னையும் சிக்கலில் ஆழ்த்தாமல் குடும்பத்தை கொண்டு செல்லும் குணத்துக்காக.
என் உறவினர்களுக்கும் எனக்கும் மனக்கசப்பு ,சண்டைகள் இருந்தாலும் ,அது உங்கள் பாடு ,நான் பொதுப்பிள்ளை என்று என் சண்டைக்கார சொந்தங்களிடம் கலந்து ,நயந்து போவதற்காக.
ஒன்றல்ல ,இரண்டல்ல ,நான்குமுறை வேலை மற்றும் பொருளாதாரம் ,இயந்திர தளவாடங்களுக்காக தாலியை தவிர அத்தனை நகையும் கழற்றி கொடுத்தமைக்காக.
என் உடன்பிறந்தோர் நலிவடைந்த சமயங்களிலும் கூட இதனை தொடர்ந்து செய்தமைக்காக.
பல வருடங்கள் தொடர்ந்து சிறு அளவில் சேவை செய்தாலும் ,இப்போது பெரிய அளவில் சேவை செய்யும்போது அதிக அலைச்சல் ,மற்றும் வேலை காரணமாக இது எனக்கு பிடிக்கவில்லை ,நான் வரவில்லை ,இது என் வேலையில்லை என்று சொல்லாமல் எனக்கு முன்னே தயாராகி நாங்கள் சேவை செய்ய கிளம்புவதற்கு முதல் ஆளாக நிற்பதற்காக.
சுருக்கமாக சொன்னால் மனைவியில் அம்மாவை பார்க்கலாம் எனும் சொல்லுக்கேற்ப நான் நலிவடைந்த ,மனம் சோர்வடைந்த ,விபத்துக்களில் சிக்கி சின்னாபின்னமாகி இவன் அவ்வளவுதான் .எழுந்திருக்கமாட்டான் என்று யாவரும் நினைத்த சமயத்தில் பெற்ற அம்மாவின் பக்குவத்தில் எனக்கு உணவூட்டி ,ஊக்கமும் கொடுத்து எழுந்து நிற்க வைத்தமைக்காக
14 வருடங்கள் குழந்தையில்லா குறையுடன் மனம் குன்றி அழுது உள்ளுக்குள் ரணம் வடிந்தாலும் ,என்னிடம் காண்பிக்காமல் வாழ இல்லை இல்லை வளைய வந்தமைக்காக
என்னை நம்பி உடலும் ,மனமும் ,உயிரும் ஒப்படைத்த மனைவிக்காக
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்,செய்வேன்
வாழ்க நலமுடன் உயர்க வளமுடன் 🙏🍇🍎🍇
வேதமித்ரா ஜோதிட மையம்
ராக்போர்டு ராஜ் P.S
755815642