ஒரு நிமிட கதை.அரசியல்வாதி ஒருவர் இறந்தார்.அவருடைய ஆவி சித்ரகுப்தனிடம் வந்தது.சித்ரகுப்தன் சொன்னார்.” நீ ஏழு கொ**லகள் செய்து உள்ளாய். அதற்கு தண்டனை. பத்து நாட்கள் கொதிக்கும் எண்ணெயில் கிடப்பாய். அதன் பிறகு உனக்கு கழுதை பிறவி கிடைக்கும். அப்போது தினமும் அடிபட்டு சாவாய்.””இருக்கட்டும். நான் எமதர்மனை பார்க்க வேண்டும்.””போ. போய் பார்.”அரசியல்வாதி எமதர்மனை அடைந்து பேசினார்.” சுவாமி, நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்.””கேள்.””எனக்கு ஒரு சந்தேகம். நான் 7 கொலகள் செய்தேன். ஏன் என்னை முதல் கொல செய்த போதே மேலே அழைத்து தண்டனை கொடுக்க வில்லை.””நல்ல கேள்வி. ஏழு கொ**லகள் செய்யும் வரை ஏன் என்னை விட்டு வைத்தாய் என்று தானே கேட்கிறாய்.””ஆமா. ஆமா.””உன் மனைவி தான் அதற்கு காரணம். அவள் தீவிர சிவபக்தை. அவள் சா*கும் வரை தீர்க்க சுமங்கலி ஆக இருக்க வேண்டும் என்பது சிவன் விருப்பம். என்று அவள் இறந்தாளோ அதன் பிறகு தான் உன் கதையை முடிக்க உத்தரவு வந்தது.”தவறு செய்பவர்கள் தொடர்ந்து இந்த உலகில் வாழ ஆண்டவனால் விடப் படுவது இப்படிப்பட்ட காரணங்களால் தான்.இது எப்படி இருக்கு.
